உழவர் பெருவிழா
உத்தரமேரூர் வட்டாரத்தில் ஆலஞ்சேரி, தோட்டநாவல், இரட்டைமங்கலம் கிராமங்களில் உழவர் பெருவிழா வெள்ளிக்கிழமை நடந்தது.
வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.கிருஷ்ணவேணி தலைமை வகித்தார்.
உதவி செயற்பொறியாளர் அசோகன், குண்ணவாக்கம் கால்நடை மருத்துவர் முருகேசன் ஆகியோர் பேசினர்.
தோட்டக்கலைத் துறை, வேளாண்மைத் துறை, கூட்டுறவு கடன் சங்கம், விதை உற்பத்தி துறை உள்பட 12 வகையான துறைகள் சார்ந்த திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது.
மேலும், பாரம்பரியப் பொருள்களான இளநீர், பருத்தி, சீயக்காய், சிறு தானியங்கள் ஆகியவற்றின் பயன்பாடுகள் குறித்தும் விளக்கப்பட்டது.
ஒன்றியக்குழு தலைவர் ஆர்.கமலக்கண்ணன், ஊராட்சி மன்றத் தலைவர்கள், வரலட்சுமி, ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வேளாண்மை உதவி அலுவலர் ஜி.பரணிதரன் நன்றி கூறினார்.
No comments