Disqus Shortname

புலியூர் மக்களை தேடி அம்மா திட்டம்

உத்தரமேரூர் ஏப்-23

உத்தரமேரூர் தாலுக்கா புலியூர் கிராமத்தில் செவ்வாய்கிழமையன்று மக்களை தேடி வருவாய் துறை அம்மா திட்டம் நடந்தது.  ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.பழநி தலைமை தாங்கினார்.  துணைத்தலைவர் எஸ்.கிளமெண்ட் முன்னிலை வகித்தார்.  துணை வட்டாட்சியர் கே.கிரிஜா, கலைமணி ஆகியோர் மனுக்களை பரிசீலித்து பயனாளிகளுக்கு ஆணை வழங்கினார்கள்.  முதியோர் உதவித்தொகை மனுக்கள் 51 பெறப்பட்டு 40 பேருக்கு உத்தரவும், 19 குடும்ப அட்டைதாரகளில் 2 பேருக்கும், 16 நபர்களில் 15 நபர்களுக்கு உதவித்தொகை உத்தரவும், 6 நபர்களில் 3 பட்டாவும் வழங்கப்பட்டது.  இவ்விழாவில் வார்டு உறுப்பினர்கள் சலினா சந்திரசேகர், வருவாய் ஆய்வாளர் லோகநாதன், கிராம நிர்வாக அலுவலர் ஹரிஹரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments