Disqus Shortname

உத்தரமேரூரில் கருடசேவை

உத்தரமேரூர் பிப்,21


உத்தரமேரூர் ஸ்ரீ ஆனந்தவல்லி நாயகா சமேத ஸ்ரீ சுந்தரவரதராஜபெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தின் 3-வது நாள்  கருட சேவை ஞாயிறன்று சிறப்பாக நடந்தது. விடியற்காலை 5.30  மணி அளவில் ஸ்ரீ சுந்தரவரதர் கருடவாகனத்தில் பகக்தர்களுக்கு கோபுர தரிசனத்தில காட்சியளித்தார். முக்கிய மாட வீதிகளின் வழியாக திருவீதி உலாவந்து பேரூந்து நிலையத்தில் உள்ள  மண்டபத்தில் ஒரு மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர். உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் சுந்தரவரதராஜ பெருமாளை வழிபட்டார். விழாவிற்கான ஏற்பாடுகளை வன்னியர் சங்கவிழா குழு நிர்வாகிகள் ராஜமாணிக்கம் கல்யாணசுந்தரம், கவுன்சிலர் தா.சுப்பராயன் மீசைவரதன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு தயிர் சாதம், மோர். வீதிக்கு வீதி அளித்தனர். 10 பஜனை குழுவினர்  பஜனை பாடல்கள் பக்தி பாடல்கள் பாடி சென்றனர். கோவில் தர்மகர்த்தா ஆர்.சேஷாத்ரி முன்னிலையில்  திருவிழா நடந்தது

No comments