Disqus Shortname

திருமுக்கூடலில் நிதி நிலை அறிக்கை பொதுகூட்டம்

உத்தரமேரூர் மார்ச்31
 உத்தரமேரூர் கிழக்கு ஒன்றியம் திருமுக்கூடல் கிராமத்தில் சனிக்கிழமையன்று நிதி நிலை அறிக்கை பொதுக்கூட்டம்  நடந்தது. கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு தலைமை தாங்கினார். அ.தி.மு.க காஞ்சி மேற்கு மாவட்ட கழக செயலாளரும் உத்தரமேரூர் சட்ட பேரவை உறுப்பினருமான வாலாஜாபாத் பா.கணேசன்  முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார். ஒன்றிய குழு பெருந்தலைவர் ஆர்.கமலக்கண்ணன்  துணைத்தலைவர் அ.ரவிசங்கர் மாவட்ட குழு உறுப்பினர் சுமதி குணசீலன் வாடாதவூர் ஒன்றிய குழு உறுப்பினர் டி.எம்.சடையாண்டி, திருமுக்கூடல் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் வரவேற்றனர். இக்கூட்டத்தில் தமிழக அரசின்   நிதி நிலை அறிக்கை பற்றி திரைப்பட தயாரிப்பாளர் அ.செ.இப்ராஹிம் ராவுத்தர் , தலைமை கழக பேச்சாளர் பாவலர் இராதாகிருஷ்ணன் உத்தரமேரூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வி.ஆர்.அண்ணாமலை தொகுதி செயலாளர் கே.ஆர்.தர்மன் காஞ்சி ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் உத்தரமேரூர் தொகுதி இணைச்செயலாளர் என்.எம்.வரதராஜீலு , மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் ஆர்.நாராயணசாமி மாவட்ட அம்மா பேரவை தலைவர் ஒ.வி.வரதன்  ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் டி.தணிகைவேல் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் வி.முருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் மேலும் இவ்விழாவில் குண்ணவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் எ.பெருமாள் ஒன்றிய பாசறை செயலாளர் ஊராட்சி மன்ற தலைவர்கள் வரலட்சுமி கருணாநிதி காவாம் பயிர் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் அரசாணிமங்கலம் சுப்புரெட்டி உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி  நன்றி கூறினார்.

No comments