Disqus Shortname

உத்தரமேரூரில் நாயுடுகள் நலசங்கம் யுகாதி விழா மிகவும் பிற்படுத்தபட்டோர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை

உத்தரமேரூர் ஏப்,27
உத்தரமேரூர் வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் உத்தரமேரூர்  வட்டார அனைத்து நாயுடுகள் நலசங்கம் சார்பில் சனிக்கிழமையன்று 5-ம் ஆண்டு யுகாதி திருவிழா சிறப்பாக நடந்தது. காஞ்சி மாவட்ட நாயுடுகள் நலசங்க தலைவர் வி.லோகநாத நாயுடு பேரணியை துவக்கி வைத்தார். உத்தரமேரூர் வட்டார நாயுடுகள் நலசங்க தலைவர் எஸ்.திவாகர் நாயுடு தலைமை தாங்கினார். செயலாளர் வி.கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். கௌரவத்தலைவர் பி.கே.சுப்பிரமணியன், இரா.கோபிநாயுடு முன்னிலை வகித்தனர்.  . சின்னத்திரை தங்கம் தொடர் புகழ் ஜீ.கே.நாயுடு ஐஸ்வர்யா படத்தை திறந்து வைத்து பரிசுகள் வழங்கி  பாராட்டி பேசினார். எஸ்.டி.என்.செழியன், கே.ஆர்.சீதாபதி, எல்.சடகோபராமானுஜம் ப.பிரேம்குமார், மாவட்ட அமைப்பாளர் ஜி.பி.இராஜரத்தினம், கௌரவதலைவர்  இராமநீராளன் வாழ்த்தி பேசினார்கள். இசை நாற்காலி போட்டியிலும் கோலப்போட்டியிலும்  வெற்றி பெற்றவர்களுக்க பரிசுகள் வழஙகப்பட்டது, குழுந்தைகள் கலை நிகழ்ச்சிகள் முடிந்தபின் பி.லட்சுமி பிரபாவின்  பரதநாட்டியம் நடந்தது. ஜாதக பரிவர்த்தனத்தில் பலர் ஜாதகங்கள் கொடுத்து பதிவு செய்தனர். வட்டார நாயுடுகள் நலச்சங்க பொருளாளர் எம்.வெங்கடேச நாயுடு நன்றி கூறினார். யுகாதி தின விழாவில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறை வேற்றப்பட்டது.

No comments