உத்திரமேரூர் அருகே வெங்கச்சேரி கிராமத்தில் சாலையில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
உத்திரமேரூர் 02/06/2023
உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை திடீரென கருமேகம் சூழ்ந்து பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் பல்வேறு பகுதிகளில் சாலையோரம் இருந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் விழுந்து இதனால் உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதில் உத்திரமேரூர் காஞ்சிபுரம் சாலையில் வெங்கச்சேரி கிராமத்தில் சாலையோரம் இருந்த சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் சாலையில் முறிந்து விழுந்தது இதனால் உத்திரமேரூர் காஞ்சிபுரம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து உத்திரமேரூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலையில் விழுந்த மரத்தினை அப்புறப்படுத்தி போக்குவரத்து சீர் செய்தனர். இதனால் உத்தரமேரூர் காஞ்சிபுரம் இடையே சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
No comments