Disqus Shortname

"டூவீலர்' மீது பேருந்து மோதல்: ஒருவர் பலி

உத்திரமேரூர் ஏப்ரல் 12:

இருசக்கர வாகனம் மீது, அரசு பேருந்து மோதியதில், ஒருவர் இறந்தார். உத்திரமேரூர் அடுத்த முருக்கேரியை சேர்ந்தவர் பாஸ்கரன், 35; கூலித் தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த, நண்பர் நேதாஜி, 38, என்பவருடன், நேற்று, இருசக்கர வாகனத்தில், காஞ்சிபுரம் சென்று, மாலை 5:30 மணிக்கு, வீடு திரும்பினார். மல்லிகாபுரம் அருகே சென்றபோது, எதிரே சென்ற அரசு பேருந்து, இவர்கள் மீது மோதியது. பலத்த காயமடைந்த இருவரும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு, நேதாஜி சிகிச்சை பலனின்றி இறந்தார். பாஸ்கரனுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து, உத்திரமேரூர் காவல் துறையினர் விசாரிக்கின்றனர்.

No comments