Disqus Shortname

உத்தரமேரூர் தாலுக்காவில் அம்மா திட்டம் பணி மனுக்கள் பெறப்பட்டது.

உத்தரமேரூர் ஏப்,08
 உத்தரமேரூர் தாலுக்காவில் அண்மையில் அம்மா திட்டம் பணி முன்னேற்ற திட்டத்தில் 6 கிராமங்களில் மொத்தம் 878 மனுக்கள் பெறப்பட்டது.  413 மனுக்கள் நிவர்த்தி செய்யப்பட்டது. இதில் பிறதுறையை சார்ந்த 11 மனுக்கள் சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்பபட்டது. உத்தரமேரூர் வட்டாட்சியர் கே.தேவராஜன் தலைமையில் அகரம்துாளி கிராமத்தில் 138 மனுக்கள் பெறப்பட்டு 64 மனுக்களும் திருமுக்கூடல் கிராமத்தில் 198 மனுக்கள் பெறப்பட்டு 97 மனுக்கள் நிவர்த்தி செய்யப்பட்டது. கோட்ட கலால் அலுவலர் காஞ்சி தாமோதரன் தலைமையில் குண்ணவாக்கம் கிராமத்தில் 73 மனுக்கள் பெறப்பட்டு 32 மனுக்களும், சாலவாக்கம் கிராமத்தில் 114 மனுக்கள்  பெறப்பட்டு 52 மனுக்கள் நிவர்த்தி செய்யப்பட்டது. உத்தரமேரூர் சமூக பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியர் கிரிஜா தலைமையில் திருப்புலிவனம் கிராமத்தில் 189 மனுக்கள் பெறப்பட்டு 49 மனுக்களும்த, களியாம்பூண்டி கிராமத்தில் 166 மனுக்கள் பெறப்பட்டு 119 மனுக்கள் நிவர்த்தி செய்யப்பட்டது

No comments