உத்தரமேரூர் ஒன்றியத்தில் எம்.பி.விஸ்வநாதன் ஆய்வு
உத்தரமேரூர்
ஒன்றியத்தில் வெளிக்கிழமையன்று காஞ்சி பாராளுமன்ற உறுப்பினர்
பெ.விஸ்வநாதன் ஆய்வு செய்தார். உத்தரமேரூர் தாலுக்கா சித்தனக்காவூர்
ஊராட்சியில் நடைபெற்ற சுகாதார திருவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
தோட்டநாவல் ஊராடசியில் நடைபெற்று கொண்டு இருக்கும் 100 நாள் வேலை
திட்டத்தையும் ஆய்வு செய்து கூலி வேலை செய்பவர்களை அழைத்து கூலி தருவது
பற்றி கேட்டறிந்தார். பிறகு தோட்டநாவல் ஊராட்சி பள்ளிக்கு ரூ,5 லட்சம்
மதிப்பில் எம்.பி.தொகுதி நிதியிலிருந்து கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர்
கட்டிடத்தை திறந்து வைத்து பள்ளி மாணவ மாணவியரிடம் கேள்விகள் கேட்டார்.
தோட்டநாவல் ஜெயக்குமார் வரவேற்றார். வட்டார தலைவைர் பி.கே.சுப்பிரமணி
பி.ஏ.சின்னப்பா, ஆர்,இராமகிருஷ்ணன், ஏ.சீனுவாசன், சாவலாக்கம்
எஸ்.எம்.எசேன்பாய் இடையம்புத்துார் சி.இராமசாமி உத்தரமேரூர் வட்டார
வளர்ச்சி அலுவலர் இர.மில்டன் ஜான்பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments