இன்று இலவச தொழிற்பயிற்சி துவக்க விழா
உத்தரமேரூர் ஏப்,09
உத்தரமேரூர்
சமுதாய மேம்பாட்டுத்திட்டம் (பாலிடெக்னிக் மூலம்) மத்திய அரசின் மனிதவள
மேம்பாட்டு துறையால் பரிந்துரை செய்யப்பட்ட உத்தரமேரூர் மீனாட்சி அம்மாள்
பாலிடெக்னிக் கல்லுாரி சார்பில் இலவச தொழிற் பயிற்சி துவக்க விழா இன்று
புதன்கிழமையன்று உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கன்னியகுளம்,
புலிவாய் கிராமத்தில் காலை 10 மணி அளவில் நடக்கிறது. ஒன்றிய
குழு உறுப்பினர் ஆர்.ஏகாம்பரம் வரவேற்கிறார். புதுவாழ்வு திட்டம் உதவி
திட்ட மேலாளர் ஆர்.சுபான் முன்னிலை வகிக்கிறார். புலிவாய் ஊராட்சி
மன்றத்தலைவர் வி,ராஜ்குமார் தலைமை தாங்குகிறார். காவல் நிலைய ஆய்வாளர்
பி.ராஜேந்திரபிரசாத் உத்தரமேரூர் மீனாட்சி அம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரி
முதல்வர் கே.ராஜா, புதுவாழ்வு திட்ட மாவட்ட மேலாளர் எஸ்.கழுகாச்சலமூர்த்தி
சிறப்புரையாற்றுகின்றனர். குழு தலைவர் ஜே.மணிகண்டன் நன்றி கூறுகிறார்.
No comments