Disqus Shortname

அரசாணிமங்கலம் 7 லட்சம் கூடுதல் வகுப்பறை கட்டிட திறப்பு விழா

உத்தரமேரூர் ஏப் 02
உத்தரமேரூர் தாலுக்கா அரசாணிமங்கலம் கிராமத்தில் ரூ,7லட்சத்தில் புதியதாக கட்டிடப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிட திறப்பு விழா அண்மையில் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் முருவம்மாள் செல்வம் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார். பள்ளித்தலைமை ஆசிரியர் சுந்தரவரதன் அனைவரையும் வரவேற்றார். உத்தரமேரூர் சட்ட மன்ற உறுப்பினர்  வாலாஜாபாத் பா.கணேசன் கலந்து கொண்டு புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை திறந்துவைத்து சிறப்புரையாற்றினார். தொகுதி செயலாளர் கே.ஆர்.தர்மன் எஸ்.எஸ்.ஏ,திட்ட அலுவலர் ஞானசேகரன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஏ.இராஜேந்திரன், உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பச்சையப்பன். கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் விஜயலட்சுமி சுப்பிரமணிரெட்டியார், ஒன்றிய கழக செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை,கே.பிரகாஷ்பாபு, ஒன்றிய குழு துணைத்தலைவர் அ.ரவிசங்கர் மேனலுார் ஊராட்சி மன்ற தலைவர் எம்.எஸ்.பெருமாள் அ.வேலாயுதம் உட்பட பலர் பங்கேற்றனர். பட்டதாரி ஆசிரியர் குமார் நன்றி கூறினார்.

No comments