Disqus Shortname

சாலை விபத்தில் இறந்த நேதாஜி உள்பட 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் : முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

http://mmimages.maalaimalar.com/Articles/2013/Apr/8169200b-450d-487d-a114-2f499fd822a5_S_secvpf.gifஉத்திரமேரூர் ஏப். 16-
முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சாலை விபத்துகளில் இறந்த காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், முருக்கேரி கிராமத்தைச் சேர்ந்த எல்லப்பன் என்பவரின் மகன் நேதாஜி
 கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார்  அருவிக்கரை கிராமம், மாத்தூர் திட்டங்கணவிளை பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவரின் மகன் ஜெஸ்டின்ராஜ் மதுரை வடக்கு வட்டம், மாத்தூர் கிராமம் ரவி,

சென்னை, பாரிமுனையில் அரசு பேருந்து மோதி உயரிழந்த பள்ளிக்கரணை, நன்மங்கலம் பகுதியைச் சேர்ந்த மங்கிலால் என்பவரின் மகன் சிறுவன் பரத்  ஆகியோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிரிழந்த ஜெஸ்டின் ராஜ், ரவி, நேதாஜி மற்றும் சிறுவன் பரத் ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரமும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments