Disqus Shortname

உத்தரமேரூரில் திருத்தேரில் பெருமாள் திருவீதி உலா


உத்தரமேரூர் ஏப்,25
உத்தரமேரூர் ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ சுந்தரவரதராஜப்பெருமாள் திருக்கோயில் திருத்தேர் திருவீதிஉலா வியாழக்கிழமையன்று நடந்தது. விடியற்காலை 5.40 மணி அளவில் ஸ்ரீ சுந்தரவரதாஜப்பெருமாள் ஸ்ரீ தேவி பூதேவியருடன் திருத்தேரில் திருவீதி உலா புறப்பட்டு திருமலையாப்பிள்ளை தெரு, பஜார்வீதி, ராயர்தெரு வழியாக காலை 8.10 மணி அளவில் நிலையை அடைந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரைவடம் பிடித்து இழுத்த போது கோவிந்தா சுந்தரவரதா என்று கோஷமிட்டு தேரை இழுத்தனர்.  பக்தர்களுக்கு பிரசாதங்கள், மோர், வழங்கப்பட்டது. தேர் நிலையை அடைந்ததும் உத்தரமேரூரில் 10.நிமிடம் சாதாரண மழை பெய்தது இவ்விழாவில் உத்தரமேரூர் சட்ட பேரவை உறுப்பினர் வாலாஜாபாத்.பா.கணேசன் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார்.

No comments