Disqus Shortname

வரதட்சனை கொடுமை காரணமாக அரசு பள்ளி ஆசிரியை அடித்து கழுத்தை நெரித்து கொலை/ –கணவன் குழந்தையுடன் தலைமறைவு

உத்தரமேரூர் ஏப்,08 
உத்தரமேரூர் தாலுக்கா மானாம்பதி பகுதியை சேர்ந்தவர் பள்ளி ஆசிரியர் கமலக்கண்ணன் இவரது மனைவி பேரரசி. இவர் வந்தவாசி பகுதியை சேர்ந்தவர் இருவரும் உத்தரமேரூர் அருகே அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் திங்கட்கிழமையன்று விடியற்காலை கமலக்கண்ணனுக்கு குடி, சீட்டு உள்ளிட்ட பழக்கங்கள் உள்ளதால் அடிக்கடி கணவன் மனைவியிடையே குடும்பத்தகராறு ஏற்படும். மேலும் மனைவி பேரரசி அவரது அப்பாவிடம் வரதட்சனை வாங்கி வரும்படி அடிக்கடி  தொந்தரவு செய்தும்  சில நேரங்களில் பணம் பெற்று வந்து கொடுத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலை வழக்கம் போல் மது அருந்திவிட்டு வீட்டுக்கு சென்ற கமலக்கண்ணன் மனைவியிடம் பணம் வாங்கி தரும் படி கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் கமலக்கண்ணன் மனைவியின் கழுத்தில் நைலான் கயிற்றால் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தனது 2 வயது குழந்தையுடன் தப்பியோடி உள்ளார். மேலும் பேராசியின் தம்பி ரங்கநாதன்  வந்து இது குறித்து உத்தரமேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின்  பேரில் பிரேதத்தை கைப்பற்றி செங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பள்ளி ஆசிரியரே குடி பழக்கம் மற்றும் கொலை செய்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

No comments