Disqus Shortname

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

உத்தரமேரூர் ஏப்,27
உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியம் ஒட்டந்தாங்கல் ஊராட்சியில் வெள்ளிக்கிழமையன்று பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி ஊராட்சி மன்ற தலைவர் ரேவதிஇராஜேந்திரன் முன்னிலையில் நடந்தது. இப்பேரணியில் ஒன்றிய குழு தலைவர் இரா.கமலக்கண்ணன் வட்டார வளர்ச்சி அலுவலர் இரா.மில்டன்ஜான்பிரபு, ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் பள்ளி மாணவ மாணவியர் பொது மக்கள் உட்பட 225 பேர் பேரணியில் பங்கேற்றனர்.

No comments