உத்தரமேரூர் பாலர் நேசன் பள்ளி 117-வது ஆண்டூ விழா
உத்தரமேரூர்
மிஷின்ஸ்கூல்தெருவில் அமைந்துள்ள பாலர் நேசன் நடுநிலைப்பள்ளி 117-வது
ஆண்டு விழா புதன்கிழமையன்று நடந்தது. பள்ளி கிராமக்கல்விக்குழுத்தலைவர்
அ.சுந்தர் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்றத்தலைவர் கு.சுமதிகுணசேகரன்,
பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவி கே.ஜம்ருத்பீ, மேலாண்மை குழு தலைவர்
ஆர்.ஜானகி முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் டி.சந்திரன் வரவேற்றார்.
தலைமை ஆசிரியை பி.கிறிஸ்டினாள்ஜெபமணி ஆண்டறிக்கை வாசித்தார். கூடுதல் உதவி
தொடக்கக்கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி மாணவ, மாணவியருக்கு பரிசுகள்
சான்றிதழ்கள் வழங்கி பாராட்டி பேசினார். பள்ளி முன்னாள் பி.டி.ஏ. தலைவர்
கோ.சந்தானகிருஷ்ணன், ஒய்வு நாள் பாடசாலை ஆசிரியர் லில்லிமேரிபுஷ்பராஜ்
ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். பட்டதாரி ஆசிரியை பி.ஏ.அற்புதமேரி
நிகழ்ச்சிகளை தொகுப்புரையாற்றினார். தொழிற்கல்வி ஆசிரியர் அ.அருளானந்தன்
நன்றி கூறினார்.
No comments