Disqus Shortname

நாளை மின் தடை அறிவிப்பு

உத்தரமேரூர்,20
தமிழ் நாடு மின்சார வாரியம், காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டம், தெற்கு கோட்டத்தில் உள்ள களியாம்பூண்டி, பெருநகர் துணை மின் நிலையங்களில் 23.04.2013 செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதனால் உத்தரமேரூர், நீரடி, வேடபாளையம், காரணிமண்டபம், களியாம்பூண்டி, மேல்ப்பாக்கம், திருப்புலிவனம், மருதம்,  சிலாம்பாக்கம், ஆண்டித்தாங்கல், மாகரல், ஆர்ப்பாக்கம், களக்காட்டூர், இளையனார்வேலுா, காவான்தண்டலம், காவாம்பயிர், கம்மராஜபுரம், ஆதவப்பாக்கம், புலிவாய், ஆசூர், நெய்யாடுவாக்கம், மலையான்குளம், வயலக்காவூர், படூர், சிறுமைலுார், பெறுநகர், மானாம்பதி, ஆக்கூர், தண்டரை, ஆலத்துார், உக்கல், கூழமந்தல், தேத்துறை, அத்தி, இளநீர்க்குன்றம், அதைச்சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின் விநியோகம் தடைபடும் என தெற்கு காஞ்சிபுரம் செயற்பொறியாளர் திரு.அ.அசோக்குமார், அவர்கள் அறிவித்துள்ளார்.  

No comments