புதுவாழ்வு திட்டம் மீனாட்சி அம்மாள் மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்திய மருத்துவ முகாம்
உத்தரமேரூர் ஏப்,13
உத்தரமேரூர்
தாலுக்கா புலிவாய் ஊராட்சி புதுவாழ்வு திட்டம் திருப்புலிவனம் பகுதி
சார்பில், மீனாட்சி அம்மாள் மருத்துவக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி
நிறுவனத்துடன் மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில். நோயாளிகளுக்கு
சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. கண்
அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்ய
மீனாட்சி அம்மாள் மருத்துவக்கல்லுாரிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. -
இம்முகாமில் பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் திராள கலந்துகொண்டனர்.
மருத்துவர்கள் குழுவினை புலிவாய் ஊராட்சி மன்றத்தலைவர் பி.ராஜ்குமார்
வரவேற்றார். புதுவாழ்வு திட்டம் திருப்புலிவனம் பகுதி ஒங்கிணைப்பு குழுவினர் முகாமிற்கு தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பள்ளி தலைமை ஆசிரியை பி.பொற்செல்வி நன்றி கூறினார்.
No comments