குண்ணவாக்கத்தில் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் விழா
உத்தரமேரூர் ஒன்றியம் குண்ணவாக்கம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமையன்று விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் விழா நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர் முன்னிலை வகித்தனர். உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத். பா.கணேசன் 25 பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகளை வழங்கி வாழ்த்தி பேசினார். கால்நடை மருத்துவர் முருகதாஸ் வரவேற்றார். இவ்விழாவில் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு, அம்மா பேரவை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.முருகன், வாடாதவூர் ஊராட்சி மன்றதலைவர் எம்.ஐ.சதிஷ், நந்தகோபால் அம்பிகா கோவிந்தராஜ் கே.ஆர்.தர்மன், உட்பட பலர் பங்கேற்றனர். குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.