Disqus Shortname

உத்திரமேரூர் மேற்கு ஒன்றியத்தில் 52 பயனாளிகளுக்கு வெள்ளாடுகள் வழங்கும் விழா

உத்திரமேரூர் ஆக,26
உத்திரமேரூர் மேற்கு ஒன்றியத்தில் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் விழா சனிக்கிழமையன்று நடந்தது ஒன்றிய குழு தலைவர் ஆர்.கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். மானாம்பதி கண்டிகை கிராமத்தில் 44 பயனாளிகளுக்கும், பூந்தண்டலம் கிராமத்தில் 18 பயனாளிகளுக்கும் விலையில்லா வெள்ளாடுகளை உத்தரமேரூர்  தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கி சிறப்புரையாற்றினார். பூந்தண்டலம் கிளை கழக செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். ஒன்றிய கழக செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை கே.பிரகாஷ்பாபு, முன்னிலை வகித்தனர். ஒட்டந்தாங்கல் ஊராட்சி மன்றத்தலைவர் ரேவதிராஜேந்திரன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் அ.ரவிசங்கர் மானாம்பதி கண்டிகை கிளை கழக செயலாளர் லுாசியா ஜேம்ஸ் , ஓ.வி வரதன், பி.வில்வபதி. தங்க. பஞ்சாட்சரம், ஏ.இராஜாதணி, நீரடி மணிகண்டன், ஊராட்சி மன்ற தலைவர்கள் புலியூர், ஆர்.பழநி.அம்மையப்ப நல்லுார் கோவர்தனன், சுப்புரெட்டியார். உட்பட பலர் கலந்து கொண்டனர்.  

No comments