Disqus Shortname

மாட்டுவண்டியில் மணல் கடத்திய 11 மாட்டுவண்டிகள் பறிமுதல் 11 பேர் கைது

உத்தரமேரூர் ஆக, 12

உத்தரமேரூர் அருகே அரசு அனுமதி இன்றி மாட்டுவண்டியில் மணல் கடத்திய 11மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்து 11 பேர் கைது செய்யப்பட்டனர். காஞ்சிமாவட்டம் மாகரல், செய்யாரை ஒட்டி உள்ள கிராமகரை ஓரங்களில் இருந்து மாட்டுவண்டிகள் மூலம் மணல் திருட்டில் ஈடுபடுவதாக உத்தரமேரூர் காவல்நிலையத்தில் வந்த தகவலை அடுத்து அப்பகுதியில் ஞாயிறன்று இரவு சோதனையிட்டபோது அரசு அனுமதி இன்றி திருப்புலிவனம் அருகே சிறுங்கோழி, பகுதியைசேர்ந்த வேதாச்சலம், தனசேகரன், நடராஜன், மாயகிருஷ்ணன், நாகப்பன் 5
பேரும், உத்தரமேரூரை சேர்ந்த கோதண்டராமன், ஆறுமுகம், குமார், பாபு,
சந்திரபாபு, முருகன், கைது செய்து ஆகியோரிடமிருந்து மணல் கடத்தில் 6
மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து உத்தரமேரூர் காவல் ஆய்வாளர்
ராஜேந்திரன்பிரசாத் தலைமையில் துணை ஆய்வாளர் முனுசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.