Disqus Shortname

உத்தரமேரூர் அருகே சுகாதாரமைய கண்ணாடிகள் உடைப்பு

உத்தரமேரூர் ஆக -23
உத்தரமேரூர் தாலுக்கா, விச்சூர் வடகாலனியில் வசிப்பவர் ஞானவேல் (27)
அண்மையில் நடைபெற்ற திருவிழாவில் நண்பர்களுடன் மது குடித்துள்ளார்.
இரவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.  உடனே அவரது நண்பர்கள் ராமன் 20, அசோக் 19, ராஜா 22, தீபக்சந்தோஷ் 19 ஆகியோர் ஞானவேலை விசூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.  மது அருந்தியுள்ளதால் சிகிச்சை அளிக்க முடியாது என்று அங்கிருந்தவர்கள்
கூறியுள்ளனர்.  இதையடுத்து அவர்களுடன் நண்பர்கள் வாக்குவாதம் செய்தனர். ஆத்திரமடைந்த அவர்கள் அங்கிருந்த பேனர் மற்றும் சுகாதாரமையத்தின் கண்ணாடிகளை அடித்து உடைத்துள்ளனர்.  மேலும், சுகாதாரதுறை ஊழியர்களான அம்மு, அசோகனை தாக்கியுள்ளனர்.  இந்நிலையில் ஞானவேல், மாரடைப்பால் காலமானார்.  இதுகுறித்து உத்தரமேரூர் காவல் நிலையத்தில் சுகாதாரமைய மருத்துவர் மைதிலி புகார் அளித்தார்.  அதன்படி பெருநகர் போலீசார் ஞானவேலின் நண்பர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து உத்தரமேரூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments