உத்தரமேரூரில் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
உத்தரமேரூர் ஆக, 21
உத்தரமேரூர்
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமையன்று(20-08-2013) அகில இந்திய விவசாய
தொழிலாளர்கள் சங்கத்தினர் 100 நாள் வேலை திட்டத்தில் உள்ள குறைபாடுகளை
சரிசெய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் எஸ்.கெம்பு தலைமை
தாங்கினார். இ.ஆறுமுகம், எம்,எட்டியப்பன் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை
செயலாளர் எம்.நாகேஷ் வட்ட செயலாளர் வி.கே. பெருமாள் விவசாயிகள் சங்க வட்ட
துணைத்தலைவர் வி.மன்னார்கிருஷ்ணன் உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து
கொண்டனர் அனைத்து ஊராட்சியிலும் முழுமையாக வேலை கொடுக்கவும், அனைவருக்கும்
வேலை அட்டையை வழங்கவும், வேலை செய்யும் உபகரணங்களை மண்வெட்டி, கடப்பாரை,
கூடை, போன்றவைகளை ஊராட்சி மன்றமே வழங்கி நடவடிக்கை
எடுக்கவும், வேலை செய்யும் போது விபத்து ஏற்பட்டால் நிவாரணம் வழங்கவும்
முறையீடு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
No comments