உத்தரமேரூர் நூக்கலம்மன் கோவில் தீமிதி திருவிழா
உத்தரமேரூர் ஆக.17
உத்தரமேரூரில் அமைந்துள்ள ஸ்ரீ நூக்கலம்மன் கோவில் 26-ம் ஆண்டு தீமிதி
திருவிழா வெள்ளிக்கிழமையன்று சிறப்பாக நடந்தது. காலை 10 மணிக்கு நங்கையர்குளத்தில் இருந்து நீர் திரட்டிவந்து பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். பகல் 1 மணிக்கு ஆலய அன்னதானமண்டபத்தில் 2165 பொது மக்களுக்கு அறுசுவை உணவு வழங்கினார்கள்.மாலை 6.35 மணி அளவில் பக்தர்கள் விரதமிருந்து தீமிதித்தனர். இரவு 8 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது.சிலம்பாட்டம். மேளவாத்தியங்களுடன் இவ்விழா நடைபெற்றது. மாலை 3.50 மணிக்கு பெய்த மழை 4.25 மணிக்கு நின்று விட்டது. இரவு 6.35 மணிக்கு பக்தர்கள் தீமிதித்தபோது மழை பொழியாதது குறிப்பிடத்தக்கது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி து.ரமேஷ் மற்றும் விழாக்குழுவினார்கள் சிறப்பாகசெய்திருந்தனர்.
உத்தரமேரூரில் அமைந்துள்ள ஸ்ரீ நூக்கலம்மன் கோவில் 26-ம் ஆண்டு தீமிதி
திருவிழா வெள்ளிக்கிழமையன்று சிறப்பாக நடந்தது. காலை 10 மணிக்கு நங்கையர்குளத்தில் இருந்து நீர் திரட்டிவந்து பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். பகல் 1 மணிக்கு ஆலய அன்னதானமண்டபத்தில் 2165 பொது மக்களுக்கு அறுசுவை உணவு வழங்கினார்கள்.மாலை 6.35 மணி அளவில் பக்தர்கள் விரதமிருந்து தீமிதித்தனர். இரவு 8 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது.சிலம்பாட்டம். மேளவாத்தியங்களுடன் இவ்விழா நடைபெற்றது. மாலை 3.50 மணிக்கு பெய்த மழை 4.25 மணிக்கு நின்று விட்டது. இரவு 6.35 மணிக்கு பக்தர்கள் தீமிதித்தபோது மழை பொழியாதது குறிப்பிடத்தக்கது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி து.ரமேஷ் மற்றும் விழாக்குழுவினார்கள் சிறப்பாகசெய்திருந்தனர்.