Disqus Shortname

உத்தரமேரூரில் காங்கிரஸ் கட்சியினர் கருத்துகேட்கும் கூட்டத்தை புறக்கணிப்பு

உத்தரமேரூர் ஆக -23
உத்தரமேரூரில் வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கருத்து கேட்கும்
ஆலோசனை கூட்டத்தை வியாழக்கிழமையன்று புறக்கணித்தனர்.  இதுகுறித்து காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைத்தலைவர் பி.ஏ.சின்னப்பா கூறியது – 22-ம் தேதி வியாழக்கிழமையன்று உத்தரமேரூர் பி.டி.என் திருமண மண்டபத்தில் கருத்துகேட்கும் கூட்டம் பகல் 12 மணியளிவில் நடக்க உள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.  ஆனால் பி.டி.என் திருமண மண்டபம், பேருந்துநிலையம் உட்பட பல இடங்களில் உத்தரமேரூர் வட்டார நிர்வாகிகள் பெயர் இடம்பெறாத பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.  மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பி.அண்ணாதுரை, காங்கிரஸ் கட்சியில் உட்பூசல் வரக்கூடாது என்றும், பேனர்கள் யாரும் வைக்கவேண்டாம் என்று கூறிவிட்டு, ஜெயந்தி, நடராஜன், காயத்ரிதேவி, மாவட்ட தலைவர் அண்ணாதுரை, சாலவாக்கம் நிர்வாகிகள், வாலாஜாபாத் நிர்வாகிகள் படங்கள் மட்டும் பேனரில் வைக்கப்பட்டுள்ளது. உத்தரமேரூர் காங்கிரஸ் கட்சியினரை மதிக்காத மாவட்ட தலைவா அண்ணாதுரையை கண்டித்து நாங்கள் அனைவரும்இக்கூட்டத்தை புறக்கணிக்கிறோம் என்று கூறி
வெளிநடப்பு செய்தனர். முன்னாள் தலைவர் எ.அகஸ்த்தியப்ப முதலியார்,
உத்தரமேரூர் வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் பி.கே.சுப்பிரமணியன், மாவட்ட துணைத்தலைவர் பி.ஏ.சின்னப்பா, வட்டார செயலாளர் எம்.ராமுரெட்டியார், வட்டார பொருளாளர் ஆர்.ராமகிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆர்.ஜெயக்குமார், மல்லிகாதுரைக்கண்ணு, ஆறுமுகநாயக்கர், நகரதலைவர் ஜி.என்.ஏழுமலை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments