Disqus Shortname

உத்தரமேரூர் மீனாட்சி அம்மாள் தொழிற்பயிற்சி மைய முதலாம் ஆண்டு துவக்க விழா



உத்தரமேரூர் ஆக,08
உத்தரமேரூர் மீனாட்சி அம்மாள் தொழிற் பயிற்சி  மைய முதலாம் ஆண்டு துவக்க விழா வியாழக்கிழமையன்று செமினார் திடலில் நடந்தது. தொழிற் பயிற்சி  மைய முதல்வர் கே.ராஜா தலைமை தாங்கினார். பாலிடெக்னிக் நிர்வாக அலுவலர் கே.பலராமன் வரவேற்றார் தொழிற்பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் வி.ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்று பேசியது  அரசு உத்தரவின் படி ஐ.டி.ஐ 2 வருட படிப்பு படித்தவர்கள் பாலிடெக்னிக்கில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர்ந்து படிக்கலாம் என்றும் பாலிடெக்னிக்கில்  படித்தவர்கள் பொறியியல் படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டு சேரலாம் என்றும் இந்த வாய்ப்பை பெற்றோர்கள் மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்  என்று கூறினார். மீனாட்சி அம்மாள் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஆர்.சேகர் சிறப்புரையில் மாணவர்கள் தொழிற்பயிற்சியில் கவனம் செலுத்தி படித்தால் உடன் வேலைக்கு செல்லாம் மாணவர்கள் செல்போனை கொண்டு வர கூடாது  என்றும் இப்பயிற்சியின் மூலம் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு அரசின் பல்வேறு சலுகைகள் கிடைக்கும் என்று கூறினார். ஒருங்கிணைப்பாளர் பேசும் போது  பெற்றோர் சார்பில் எம்.தனசேகரன் பேசினார். விரிவுரையாளர் ஏ.செல்வராஜ் நன்றி கூறினார்.