Disqus Shortname

வேடபாளையத்தில் அம்மா திட்ட முகாம்

உத்தரமேரூர் ஜீலை,31
உத்தரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வேடபாளையம் கிராமத்தில் செவ்வாய்கிழமையன்று  அம்மா திட்ட முகாம் நடந்தது.  உத்தரமேரூர் வட்டாட்சியர் சாவித்திரி வரவேற்றார். காஞ்சி மாவட்ட ஆட்சியர் லி.சித்ரசேனன் தலைமை தாங்கி. உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு 85 முதியோர்களுக்கு முதியோர் உதவித்தொகையும், 31 இலவச வீட்டுமனை பட்டாவும் 8 குடும்பஅட்டை, 8 பட்டாமாற்றங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்கள், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவரும், அ.தி.மு.க மேற்கு ஒன்றிய கழக செயலாளருமான வி.ஆர்.அண்ணாமலை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு முன்னிலைவகித்தனர். இம்முகாமில் ஒன்றியக்குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர். மாவட்ட குழு உறுப்பினர் சுமதி குணசீலன் அம்மா பேரவை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திருவந்தவார் முருகன், பூந்தண்டலம் இராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். தலைமையிடத்து துணை வட்டாட்சியர் கலைவாணி நன்றி கூறினார்.