168 ஆதரவற்ற குருகுல மாணவர்களுக்கு 600கிலோ இலவச அரிசி அரிமா சங்கம் அளிப்பு
உத்தரமேரூர்
தாலுக்கா காரணை மண்டபம் கிராமத்தில் திருவள்ளுவர் குருகுலத்தில் ஆதரவற்ற
பள்ளி மாணவ, மாணவியர் 168 பேருக்கு உத்தரமேரூர் சோழா அரிமா சங்க
உறுப்பினர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இப்பள்ளிக்கு 600கிலோ அரிசியினை
வழங்கினர். சனிக்கிழமையன்று இக்குருகுலத்தில் நடைபெற்ற விழாவிற்கு அரிமா
சங்க தலைவர் ஜி.காளிதாஸ் தலைமை தாங்கினார். செயலாளர் தே.வீராசாமி
வரவேற்றார். சாசனத்தலைவர் டாக்டர். சி.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
அரிமா மாவட்ட ஆளுநர் எம்.எஸ்.முருகப்பா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு
600 கிலோ அரிசி மூட்டைகளை குருகுல கண்காணிப்பாளர் ஏ.திருஞாசம்மந்தனிடம்
வழங்கினார். குருகுலத்தில் மரக்கன்றுகளையும் உத்தரமேரூரில் அரிமா சங்க
பெயர் பலகையையும் திறந்து வைத்தார். மாவட்ட அவை செயலாளர் ஜி.ஸ்ரீதர், அரிமா
பொறுப்பாளர் ஆர்.ஜெயசங்கர் சோழா அரிமா சங்க நிர்வாகிகள் எஸ்.கமல்கிஷோர்,
துணை செயலாளர் கோ.சந்தானகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். சங்க பொருளாளர்
வழக்கறிஞர் எம்.மணி நன்றி கூறினார்.