Disqus Shortname

நீரடியில் அம்மா திட்ட முகாம் 137 மனுக்கள் ஏற்பு

உத்தரமேரூர் ஆக -17
உத்தரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட நீரடி கிராமத்தில் அம்மா திட்ட முகாம்
அண்மையில் நடந்தது.  பேரூராட்சி பாசறை நகர செயலாளர்

ஆர்.மணிகண்டன் தலைமை தாங்கினார்.  ஒன்றியக்குழுத் தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர் முன்னிலை வகித்தனர்.  மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வி.ஆர்.அண்ணாமலை, கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு வரவேற்றனர்.  இம்முகாமில் 137 மனுக்கள் பெறப்பட்டது. 41 மனுக்களுக்கு உடனடி தீர்வுகாணப்பட்டது. 59 மனுக்கள் நிராகரிக்கபட்டது. 37 மனுக்கள் நிலுவையில் உள்ளது.  இம்முகாமில் உத்தரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் கலந்து கொண்டு உதவி தொகைக்கான உத்தரவை வழங்கி பேசினார்.  இம்முகாமில் குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஓ.வி.வரதன், திருவந்தவார் முருகன், கே.தயாளன், எம்.கே.பி.வேலு, களியாம்பூண்டி தங்க.பஞ்சாட்சரம், பேரூராட்சி துணைத்தலைவர் இ.தயாளன், மானாம்பதி பி.வில்வபதி,  உத்தரமேரூர் பொ.சசிகுமார், சதீஷ், ஒன்றிய இளைஞரணி துணைச்செயலாளர் ஆர்.ஜெயபாலன், புலியூர் ஊராட்சி மன்றத்தலைவர் பழனி, அ.பி.சத்திரம் ஜி.பெருமாள், உட்பட பலர் கலந்துகொண்டனர். பூந்தண்டலம் ராஜேந்திரன் நன்றி கூறினார்.