மதுவினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுப்பதற்றகான விழிப்புணர்வு முகாம்
திருப்போரூர்
பி.எம்.வி.எஸ் பெண்கள் மேம்பாடு மற்றும் விழிப்புணர்வு சங்கமும்,
மதுராந்தகம் பெண்கள் நல முன்னேற்ற சங்கமும் இணைந்து மதுவினால்
பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுப்பதற்கான விழிப்புணர்வு முகாம் வடபாதி
பொன்னியம்மன் கோயில் தெருவில் திங்கட்கிழமையன்று நடந்தது. மதுராந்தகம்
ஒன்றியக்குழுத்தலைவர் ஏ.வள்ளி அப்பாதுரை தலைமை தாங்கினார். திருப்போரூர்
பி.எம்.வி.எஸ். இயக்குனர் கே.மஞ்சுளா முன்னிலை வகித்தார். உத்தரமேரூர்
பெண்கள் நல முன்னேற்ற சங்க இயக்குனர் ஆர்.செல்வம் தனசேகரன் அனைவரையும்
வரவேற்று பேசினார். மதுராந்தகம் ஒன்றியம் வடபாதி பஞ்சாயத்து தலைவர்
கு.ஜெயச்சந்திரன், ஆம்பூர் ஆர்.ஐ.எஸ்.இ.இயக்குனர் கே.வசந்தா ஆகியோர்
மதுவினால் பாதிக்கப்பட்டவர்களின் விழிப்புணர்வு முகாமில் கருத்துரையாற்றினார்கள். வடபாதி பி.எல்.எப்.தலைவி கு.வனிதா நன்றி கூறினார்.
No comments