உத்தரமேரூர் பேரூராட்சி மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
உத்தரமேரூர் ஆக,06
உத்தரமேரூர்
பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் நடவடிக்கையில் மழை நீர்
சேகரிப்பு திட்டத்தினால் நிலத்தடி நீர் மட்டும் உயர்வதுடன் குடிநீர்
தட்டுப்பாட்டை தடுக்க இயலும் எதிர் காலத்தில் வரும் சந்ததியினருக்கு
நிலத்தடி நீரை சேகரிப்பதன் மூலமே நீர் வள ஆதாரத்தை பெருக்க முடியும் இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் படி உத்தரமேரூர் பேரூராட்சியில் இருந்து செவ்வாய்கிழமையன்று மழைநீர்
சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரூராட்சி தலைவர் சுமதி
குணசேகரன் தலைமை தாங்கி பேரணி துவக்கி வைத்தார். துணைத்தலைவர் இ.தயாளன்
முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் எஸ்.ஆரோக்கியதாஸ்
வரவேற்றார். பள்ளி மாணவ மாணவியர்கள் மழை நீர் சேகரிப்பு அவசியத்தை பற்றி துண்டு பிரசுரங்களை வழங்கி உத்தரமேரூர் நகரில் பிரசாரம் செய்தனர். இளநிலை உதவியாளர் மே.ச.வெ.ஆனந்தசயனம் நன்றி கூறினார்.