Disqus Shortname

அம்மையப்பநல்லூரில் அம்மா திட்ட முகாம் 177 மனுக்கள் ஏற்பு

உத்திரமேரூர் ஆக -15

உத்திரமேரூர் மேற்கு ஒன்றியம் அம்மையப்பநல்லூர் கிராமத்தில் அம்மா திட்டமுகாமில் 177 மனுக்கள் பெறப்பட்டது.  அம்மையப்பநல்லூர் ஊராட்சி
மன்றத்தலைவர் எஸ்.கோவர்தன் தலைமை தாங்கினார்.  வட்டாட்சியர் சாவித்திரி வரவேற்று பேசியது.  பெறப்பட்ட மொத்த மனுக்கள் 177, முதியோர் உதவிதொகை 18,ஜாதிசான்று 4, பட்டா மனை மாற்றம் 2 மற்றும் பென்னலூர் ஊராட்சியில் உட்பட்ட பூந்தண்டலம், அம்மையப்பநல்லூர் கிராம ஊராட்சிகளுக்கு உட்பட்ட இம்முகாம் நடைபெற்றதாக கூறினார்.  இம்முகாமில் உத்தரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் கலந்து கொண்டு உதவி தொகைக்கான உத்தரவை வழங்கி பேசினார்.  ஒன்றியக்குழுத் தலைவர் ஆர்.கமலக்கண்ணன்,துணைத்தலைவர் அ.ரவிசங்கர், மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வி.ஆர்.அண்ணாமலை,
கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு, பூந்தண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதிராஜேந்திரன், எம்.கே.பி.வேலு, களியாம்பூண்டி தங்க.
பஞ்சாட்சரம், குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, திருவந்தவார் முருகன்,
பேரூராட்சி துணைத்தலைவர் இ.தயாளன், மானாம்பதி பி.வில்வபதி, ஏ.ராஜாமணி,உத்தரமேரூர் பொ.சசிகுமார், சதீஷ், ஒன்றிய இளைஞரணி துணைச்செயலாளர்ஆர்.ஜெயபாலன் உட்பட பலர் கலந்துகொண்டனர். அம்மையப்பநல்லூர் கிளை செயலாளர் துலுக்கானம் நன்றி கூறினார்.