Disqus Shortname

திருப்புலிவனத்தில் சதுரங்க விழிப்புணர்வு பேரணி

உத்தரமேரூர் ஆக -23
உத்தரமேரூர் தாலுக்கா, திருப்புலிவனம் அரசு உயர்நிலைப்பள்ளியில்
வெள்ளிக்கிழமையன்று சதுரங்க விழிப்புணர்வு பேரணி நடந்தது.  பெற்றோர்
ஆசிரியர் கழக தலைவர் கே.பிரகாஷ்பாபு தலைமை தாங்கி பேரணியை
துவக்கிவைத்தார்.  உதவி தலைமை ஆசிரியர் கே.வேல்பாரி வரவேற்றார்.
இப்பேரணியில் மாணவர்கள் சதுரங்க விளையாட்டுப்பற்றி கோஷங்கள் எழுப்பி
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  ஆசிரியர்கள் எம்.சாரதா,
எம்.சுபாஷினி, பி.கல்பனா உட்பட பலர் பங்கேற்றனர். உடற்கல்வி ஆசிரியர்
பி.கோபிநாத் நன்றிகூறினார்.

No comments