Disqus Shortname

"வேளாண்மை அலுவலகத்திற்கு சாலை வசதி அவசியம்'

உத்திரமேரூர் ஆகஸ்ட் 26 : 
உத்திரமேரூர், ஒன்றிய வேளாண்மை துறை அலுவலகத்திற்கு செல்ல, முறையான சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உத்திரமேரூர், ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே, ஒன்றிய வேளாண்மை துறை அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு, ஒன்றியம் முழுவதும் உள்ள ஏராளமான விவசாயிகள், விதை, உரம், இடுபொருட்கள் மற்றும் ஆலோசனைகளை பெற, தினசரி வந்து செல்கின்றனர். இந்த அலுவலகத்திற்கு செல்ல முறையான பாதை வசதி இல்லாததால், கோவில் அருகில் உள்ள இந்திர குளத்தங்கரை மீது சென்று, அங்குள்ள மண் பாதை வழியாக செல்லும் நிலை உள்ளது.
தற்போது இப்பாதை, குண்டும் குழியுமாக, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால், மழைக் காலங்களில், வேளாண்மை துறை அலுவலகத்திற்கு வரும் அலுவலர்கள் மற்றும் விவசாயிகள், பள்ளத்தில் விழுந்து, அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வேளாண்மை துறை அலுவலகத்திற்கு செல்ல, முறையான சாலை வசதி ஏற்படுத்தி தர, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

No comments