Disqus Shortname

கடல்மங்கலத்தில் சுவாமி விவேகானந்தர் சேவா சங்கம் திறப்பு விழா

உத்தரமேரூர் ஆக, 07
உத்தரமேரூரை அடுத்த கடல்மங்கலம் கிராமத்தில் சுவாமி விவேகானந்தர்  சேவா சங்கம் திறப்பு விழா அண்மையில் நடந்தது. மல்லியங்கரணை ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷின் பள்ளி செயலாளர்  சுவாமி அமூர்தானந்தர் தலைமை தாங்கி சேவா சங்கத்தை திறந்து வைத்து பேசினார். ஊராட்சி மன்ற தலைவர் தே.வீராசாமி வரவேற்றார். குமார் அய்யர் முன்னிலை வகித்தார். சுவாமி விவேகானந்தரின் உபதேசங்களின் படி மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் இச்சேவா சங்கம் துவங்கியுள்ளதாக பேசினார்கள்  சேவா சங்க உறுப்பினர்கள் வெ.கார்த்திக், ஏ.தங்கராசு, மு,ஜெயபால், நா.தேவேந்திரன், சு.பெருமாள் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து கடல்மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர்க்கு இலவச நோட்டு, புத்தகம், பேனா. பென்சில் பிரசாதங்கள் வழங்கினார்கள்  ஏ.ரமணன் நன்றி கூறினார்