Disqus Shortname

இருளில் மூழ்கியது உத்தரமேரூர்

உத்திரமேரூர் ஆக, 17
உத்தரமேரூர் நகரில் கடந்த 7 நாட்களாக இரவு நேரங்களில் அனைத்து தெருக்களிலும் மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால் பொது மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.புதன்கிழமை இரவு 2.30 மணி முதல் காலை 6.30 மணி வரை வீட்டு இணைப்புகளில் மின் துண்டிக்கப்பட்டதால் கொசுக் கடியால் தூக்கமின்றி குழந்தைகளுடன் பொதுமக்கள் தெருவில் வந்து அமரவேண்டிய நிலை ஏற்பட்டது.
உத்தரமேரூர் பஸ் நிலையத்தில் உள்ள சோடியம் மின் விளக்கு எரிவது கிடையாது. எனவே அரசு அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து சீரான மின்சாரத்தை வழங்கவும், கொசு ஒழிப்பை துரிதப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.