உத்தரமேரூர் கிழக்கு ஒன்றியத்தில் அ.தி.மு.க அரசின் 2-ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் கிராமங்களில் வினியோகம்
உத்தரமேரூர்
கிழக்கு ஒன்றியத்தில் செவ்வாய்கிழமையன்று அ.தி.மு.க. அரசின் 2-ஆண்டு சாதனை
விளக்க துண்டு பிரசுரங்கள் கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும்
அ.தி.மு.க. வினர் வழங்கி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலைக்கு
வாக்களித்து தமிழக முதல்வரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும்
பிரச்சாரம் செய்தனர். வெங்கச்சேரி, ஆதவப்பாக்கம், காவாம்பயிர்,
கடம்பரநாதர்கோவில், மணல்மேடு, உச்சி கொல்லைமேடு, இருமரம், செம்பலம்
திருமுக்கூடல், வயலக்காவூர் ஆகிய கிராமங்களில் உத்தரமேரூர் தொகுதி சட்ட
மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமையில் ஒன்றிய கழக செயலாளர்கள்
கே.பிரகாஷ்பாபு, வி.ஆர்.அண்ணாமலை, புலிவாய் ஒன்றியக்குழு உறுப்பினர்
ஆர்.ஏகாம்பரம், கார்வண்ணன், புத்தளி ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன்,
புலிவாய் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் வயலக்காவூர் ஊராட்சி மன்ற தலைவர்
ஸ்ரீ தேவிசங்கர், துணைத்தலைவர் பி,நீதி, வயலக்காவூர் கூட்டுறவு
சங்கத்தலைவர் கே.பெருமாள், ஒன்றிய மாணவர் அணி துணைச்செயலாளர் எஸ்.கோதண்டன்,
பாசறை ஒன்றிய இணைச்செயலாளர் ஏ.ராமன் புல்லம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர்
பி.எஸ்.ஜெயவேல், ஊராட்சி செயலாளர் வி.கண்ணபிரான், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற
தலைவர் டி.எம்.சடையாண்டி, கிழக்கு ஒன்றியம் அம்மா பேரவைசெயலாளர் திருவந்தவார் முருகன் மாவட்ட குழு உறுப்பினர் டி.எம்.சடையாண்டி, பி.வில்வபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.