Disqus Shortname

உத்தரமேரூர் அடுத்த சாலவாக்கத்தில் மணல் திருடிய வாலிபர் குண்டாஸ் சட்டத்தில் கைது

உத்தரமேரூர் ஆக,19
        உத்தரமேரூர் தாலுக்கா சாலவாக்கம் அருகே உள்ள பிலாப்பூர் கிராமத்தில்
வசிக்கும் கோகுலகிருஷ்ணன் மகன் அசோக் (22) மணல் திருடியதற்காக
ஞாயிற்றுக்கிழமையன்று குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.  காஞ்சி மாவட்ட ஆட்சித்தலைவர் லி.சித்ரசேனன்  உத்தரவின் பேரில்  காஞ்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயக்குமார் பரிந்துரையின் பேரில்  மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பலராமன் தலைமையில், உத்தரமேரூர் காவல்துறை ஆய்வாளர் ராஜேந்திரபிரசாத், படாளம் காவல்துறை ஆய்வாளர் அசோக் மேத்தா ஆகியோர் அசோக் (22)வாலிபரை மணல் திருட்டில் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்து வேலுார் சிறையில் அடைத்தனர் முதல் முறையாக காஞ்சி மாவட்டத்தில் மணல் திருட்டில் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்டத்தக்கது.