Disqus Shortname

வயலக்காவூரில் அம்மா திட்ட முகாமில் 135 மனுக்கள் பரிசீலனை

உத்தரமேரூர் ஆக -13

 
உத்தரமேரூர் கிழக்கு ஒன்றியம், வயலக்காவூர் கிராமத்தில்
செவ்வாய்கிழமையன்று அம்மாதிட்ட முகாம் நடைபெற்றது.  ஊராட்சி மன்றத்தலைவர் ஸ்ரீதேவிசங்கர் தலைமை தாங்கினார்.  ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன்முன்னிலை வகித்தார்.  தனிவட்டாட்சியர் ஆர்.கிரிஜா வரவேற்றார்.உத்தரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் கலந்துகொண்டு முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், குடும்ப அட்டைகளுக்கான
உத்தரவை வழங்கி தமிழக முதல்வரின் அரசை பாராட்டி பேசினார். பெறப்பட்ட
மனுக்கள் 135, முதியோர் உதவித்தொகை 58, ஏற்பு 20,  தள்ளுபடி 2,
நிலுவையில் உள்ளது 36, கணினி பட்டா 21 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகா மண்டல துணை வட்டாட்சியர் ஆர்.லட்சுமி தெரிவித்தார்.  இத்திட்டத்தில்  ஒன்றிய கழக செயலாளர்  கே.பிரகாஷ்பாபு, திருவந்தவார் முருகன், ஓ.வி.வரதன், பி.வில்வபதி, கூட்டுறவு சங்கத்தலைவர் பெருமாள் உள்பட பலர் பங்கேற்றனர்.
முடிவில் கூட்டுறவு சங்க துணைத்தலைவர் எஸ்.ராஜன் நன்றி கூறினார்.