Disqus Shortname

பாம்பு கடித்து சிறுவன் சாவு

உத்தரமேரூர் ஆக, 10
உத்தரமேரூர் அடுத்த  பருத்திக்கொல்லை கிராமத்தில்  சனிக்கிழமையன்று (10-08-2013) பாம்பு கடித்து சிறுவன் இறந்தான் பருத்திக்கொல்லை கிராமத்தில் வசிப்பவர் தஞ்ஞான்(35) இவரது மனைவி பார்வதி(30) விவசாயம், இவர்களுக்கு  1மகள், 1மகன் உள்ளனர். இவர்களது மகன் டி.பரசுராமன்(10) மல்லியங்கரணை ஸ்ரீ ராமகிருஷ்ணாமிஷின் பள்ளியில் 5-ம் வகுப்பு பயின்று வருகிறான், வெள்ளிக்கிழமையன்று சிறுவன் பரசுராமன் இரவு வீட்டில் துாங்கிகொண்டிருந்த  போது வயிற்றிலும, வலது கால் தொடையிலும் இரு இடங்களில் பாம்பு கடித்துள்ளது. விடியற்காலை சிறுவன் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்துள்ளான். இதை கண்ட பெற்றோர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக செங்கை அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்று சிகிச்சை அளித்தும் விடியற்காலை 4,30 மணி அளவில் சிறுவன் இறந்தான், இது குறித்து உத்தரமேரூர் போலீசார். வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.