Disqus Shortname

கூடுதல் பஸ் இயக்க கோரி மாணவர்கள் சாலை மறியல்

உத்தரமேரூர் ஆக,30
உத்தரமேரூர் அடுத்த கருவேப்பம்பூண்டி கிராமத்தில் பேரூந்து நிறுத்தமருகில் பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க கோரி பள்ளி மாணவ மாணவியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் நேற்று முன்தினம் புலிவாய் கிராமத்தை சேர்ந்த அருள் என்பவரின் மகள் சந்தியா வயது 11 திருப்புலிவனம் உயர்நிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு பயின்று வருகின்றார் இவர் பள்ளி செல்லவதற்காக மணல்மேடு பகுதியில் காலை 8,30 மணியளவில்  89 என்ற அரசு பேருந்தில் ஏறும் போது தவறி விழுந்து பலத்த காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், இச்சம்பவத்தை தொடர்ந்து மாணவர்கள் மாகரலிருந்து இருந்து உத்திரமேரூர் வரை கூடுதல் பஸ் இயக்கக் கோரி கருவேப்பம்பூண்டி பேரூந்து நிறுத்தமருகே சாலை மறியலில் ஈடுபட்டனர், தகவலறிந்த உத்தரமேரூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மாணவர்கள் கலைந்து சென்றனர், இச்சம்பவத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது,

No comments