Disqus Shortname

திருவந்தவார் கிராமத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்

உத்தரமேரூர் ஆக,11
உத்தரமேரூர் கிழக்கு ஒன்றியம் திருவந்தவார் கிராமத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் சனிக்கிழமையன்று நடந்தது. உத்தரமேரூர் ஒன்றியக்குழு தலைவர் ஆர். கமலக்கண்ணன், தலைமை தாங்கினார். உத்தரமேரூர் கிழக்கு ஒன்றியம் அம்மா பேரவை செயலாளர் திருவந்தவார் முருகன் முன்னிலை வகித்தார். உத்தரமேரூர் வட்டாட்சியர் சாவித்திரி வரவேற்றார்.  இம்முகாமில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை 224 நபர்களுக்கு, மொத்தம் ரூ.2,64 லட்சம், விதவை உதவித்தொகை 528 நபர்களுக்கு மதிப்பு ரூ,5,28 லட்சம், மாற்றுக்கிறனாளிகள் உதவித்தொகை 60 நபர்களுக்கு ரூ,60 ஆயிரம், 7 மாணவர்களுக்கு இருளர் சான்று என மொத்தம் 8,52 லட்சம் உதவி தொகைகளுக்கான உத்தரவை  மாவட்ட கழக செயலாளரும், உத்தரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான  வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கி  தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசின் சாதனைகளை பற்றி வாழ்த்தி பேசினார்.  காஞ்சிபுரம் ஆர்.டி.ஒ.சக்திமணி ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு,  துணைத்தலைவர் அ.ரவிசங்கர் ஒன்றியக்குழு உறுப்பினர் வனிதா முருகன், பி.வில்வபதி, களியாம்பூண்டி தங்க.பஞ்சாட்சரம், குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தண்டரை தணிகைவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.