உத்தரமேரூரில் உரியடி விழா
உத்தரமேரூர் ஆக,29
உத்தரமேரூர்
பஜார் வீதியில் அமைந்துள்ள வேணுகோபால் சுவாமி கோவிலில் கிருஷ்ணஜெயந்தியை
முன்னிட்டு புதன்கிழமையன்று உரியடி விழா சிறப்பாக நடந்தது, காலை 10 மணிக்கு
விசேஷ திருமஞ்சனம் முடிந்தபின் பஜனை குழுவினரின் இன்னிசையுடன்
அலங்கரிக்கப்பட்ட உற்சவ கிருஷ்ணர் உத்தரமேரூரில் முக்கிய வீதிகளில்
திருவீதியுலா வந்த பின் 27 குழந்தைகள் கண்ணன், இராமர், சீதா, ராதை, ஹனுமன்
வேடங்கள் அணிந்து ஊர்வலமாக வந்தனர், ஆள்வராமபூண்டி பாரத சொற் பொழிவாளர்
இராமசாமி, பட்டாபி குழுவினர் கண்ணபுரானத்தை சொற்பொழிவாற்றினர், இரவு 7,30
மணியளவில் உரியடி உற்சவத்தை அரிமா சங்க துணைசெயலாளர்
கோ,சந்தானகிருஷ்ணன் துவக்கிவைத்தார் பக்தர்களுக்கு பிரசாதங்கள் அன்னதானம்
லகன் ஜீவல்லர்ஸ் உரிமையாளர் யூ.அமர்த்லால் வழங்கினார். ஆயிரக்கணக்காண
பக்தர்கள் இத்திருவிழாவை கண்டுகளித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை எஸ்.
ரங்கநாதன், ஏ.பொன்னுவேல், இ.எம்.டி.ராஜன், பி.மனோகரன் ஆகியோர்
செய்திருந்தனர்.
No comments