Disqus Shortname

முற்றுகை பேராட்டம்.

உத்தரமேரூர் ஜீலை,06
உத்தரமேரூர் தாலுக்கா காவனுார்புதுச்சேரி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை சங்கத்தை வெள்ளிக்கிழமையன்று பொது மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இச்சங்கத்தின் அலுவலராக  ஏழுமலை பணியாற்றி வருகிறார். இவர் பணியில் குடிபோதையில் இருப்பதால்  அலுவலகத்திற்கு வரும் பொது மக்களை அவதுாராக பேசியுள்ளார். இதை கண்டித்து  அப்பகுதி பொது மக்கள் அலுவலகத்தை  முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். தகவல் அறிந்ததும் காவல் துறையினர் விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி முற்றுகை போராட்டத்தை கைவிடவைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.   

No comments