Disqus Shortname

பணி நிறைவு பாராட்டு விழா

உத்தரமேரூர் ஜீலை 09
உத்தரமேரூர் கிராம நிர்வாக அலுவலராக பணி புரிந்து திங்கட்கிழமையன்று பணி ஓய்வு பெற்ற தமிழ்நாடு கிராமநிர்வாகஅலுவலர்கள் சங்கஉத்தரமேரூர் தாலுக்கா  தலைவர் அரிமா.இரா.கோபிக்கு, பணி நிறைவு பாராட்டு விழா வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. சங்க வட்ட துணைத்தலைவர் டி.ரத்தினகுமார் தலைமைதாங்கினார். துணைச்செயலாளர் ஆர்.குழந்தைவேலு முன்னிலை வகித்தார். செயலாளர் வி.நல்லமுத்து வரவேற்றார். தாசில்தார் கே.தேவராஜன் பணி ஓய்வு ஆணை வழங்கி பாராட்டி பேசினார்.  மாவட்ட தலைவர் வி.கோவிந்தராசன், மாவட்ட செயலாளர் கே.சுடர்மணி மாவட்ட துணைச்செயலாளர் எ.தசரதன் வருவாய் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணைத்தலைவர் தாசில்தார்வி.தென்னரசு உத்தரமேரூர் சோழா அரிமா சங்க தலைவர் ஜி.காளிதாஸ், செயலாளர் டி.வீராசாமி, பொருளாளர் அரசு வழக்கறிஞர் எம்.மணி ஆகியோர் நினைவுபரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்கள். பணி ஓய்வு பெற்ற இரா.கோபி ஏற்புரையாற்றினார். தாலுக்கா பொருளாளர் கே.ராகவன் நன்றி கூறினார்.  

No comments