Disqus Shortname

உத்தரமேரூர் ஒன்றியத்தில் 26 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் திறப்புவிழா

உத்தரமேரூர்  ஜீலை-1
உத்தரமேரூர் ஒன்றியத்தில் திங்கட்கிழமையன்று அனைவருக்கும் கல்வி
திட்டத்தின் கீழ் ரூ.26 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை
கட்டிடங்கள் திறப்புவிழா நடந்தது.  ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு
தலைமை தாங்கினார். ஒன்றிய குழுதலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர்அ.ரவிசங்கர் முன்னிலை வகித்தனர்.  வட்டார வளமைய மேற்பார்வையாளர் எ.இராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். சித்தனக்காவூர்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 3.5 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடம்,ஒழையூர் ஊராட்சியில் 10.10 லட்சத்தில் மூன்று வகுப்பறையும்,
சேந்தாங்குளம் ஊராட்சியில் 7 லட்சத்தில் இரண்டு வகுப்பறையும்,
காரியமங்கலம் ஊராட்சியில் 5.5 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கூடுதல்
வகுப்பறை கட்டிடங்களை உத்தரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் திறந்துவைத்து சிறப்புரையாற்றினார்.  இவ்விழாவில் மாவட்ட கூடுதல் திட்ட அலுவலர் அன்பரசு, உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பச்சையப்பன், ஊராட்சி மன்ற தலைவர்கள், தண்டரை அஞ்சலிதேவிதணிகைவேல், சேந்தாங்குளம் வரலட்சுமிகருணாநிதி, ஒழையூர் எல்லப்பன், சாலவாக்கம் ஒன்றிய குழு
உறுப்பினர் வனிதாமுருகன், மாவட்ட குழு உறுப்பினர் சுமதிகுணசீலன், ஒழையூர் பள்ளி தலைமை ஆசிரியர் பர்னபாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments