Disqus Shortname

உத்தரமேரூரில் கிணற்றில் விழுந்த புள்ளி மான் மீட்பு

உத்தரமேரூர் ஜீலை07

உத்தரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வேடபாளையம் கிராமத்தில் திங்களன்று கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்கப்பட்டது. வேடபாளையத்தை சேர்ந்த பாலசுந்தரம் என்பவர் தனது வயலுக்கு சென்றிருந்தார். அப்போது கிணற்றில் சத்தம்  கேட்டதை அறிந்து பார்த்த போது புள்ளி மான் ஒன்று கிணற்றில் விழுந்து தத்தளித்து கொண்டிருந்தது உடனே காவல் துறையினருக்கும், தீயணைப்பு துறையினருககும் தகவல் அளித்தார். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் புள்ளிமானை காப்பாற்றி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

No comments