Disqus Shortname

உத்தரமேரூரில் தே.மு.தி.க. கண்டன் ஆர்ப்பாட்டம்

உத்தரமேரூர் ஜீலை,18
காஞ்சி தெற்கு மாவட்டம் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் சார்பில் வியாழக்கிழமையன்று உத்தரமேரூர் பேரூந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சட்டமன்ற எதிர்கட்சி, தலைவரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் மீது தமிழக அரசு தொடர்ந்து பொய் வழக்கு போடும் அ.தி.மு.க அரசு ஜெயலலிதாவை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காஞ்சி தெற்கு மாவட்டகழகசெயலாளர் ஆர்.இரமேஷ்பிரபாகாரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளர் வி.பி.ஜான், ஒன்றிய கழக செயலாளர் வி.கன்னியப்பன் முன்னிலை வகித்தார். பேரூர் செயலாளர் ஜி.கே.வெங்கடேசன் வரவேற்றார். வடக்கு மாவட்ட செயலாளரும், செங்கை எம்.எல்.ஏ.வுமான அனகை  டி.முருகேசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கே.பி.அருண்குமார். மாவட்ட அவைத்தலைவர் எஸ்.தங்கபாண்டியன், மாவட்ட பொருளாளர் எம்.ராஜேந்திரன், மாவட்ட மகளிர் அணி துணைசெயலாளர் ஆர்.ஜெகவள்ளி, டி.கஜேந்திரன் தெ.பழனி, எஸ்.கந்தகுருநாதன் ஆகியோர்  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் உத்தரமேரூர் காவல் துறை ஆய்வாளர் ராஜேந்திரபிரசாத் ஆர்ப்பாட்டம் நடத்திய 120 தே.மு.தி.க வினரை கைது செய்து சக்தி திருமண மண்டபத்தில் அடைத்தனர்.