அத்தியூரில் சிறப்பு மருத்துவ முகாம் 20 ம் தேதி நடக்கிறது.
உத்தரமேரூர் ஜீலை 17
மீனாட்சி
மருத்துவக்கல்லுாரி மருத்துவ மனையும் அத்தியூர்கிராம மருத்தவ மையமும்
இணைந்து, அத்தியூர் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை சிறப்பு
மருத்துவ முகாம் நடக்கிறது. டாக்டர். சி.சுப்பிரமணியம் வரவேற்கிறார்.
அகரம்துாளி ஒன்றிய கவுன்சிலர் நேரு, ஊராட்சி மன்றத்தலைவர் பழனி,
மீனாட்சிஅம்மாள் பாலிடெக்னிக் ஒருங்கிணைப்பாளர் வி.இராஜேந்திரன் ஆகியோர்
வாழ்த்தி பேசுகிறார்கள். பாலிடெக்னிக் முதல்வர் கே.ராஜா முகாமை துவக்கி
வைக்கிறார். முகாமில் பொது மருத்துவ, எலும்பு சிகிச்சை, மகளிர்,
குழந்தைகள், தோல் ஆகிய மருத்துவம் பொது அறுவை சிகிச்சை, கண்புரை உள்ளவர்கள்
மீனாட்சி மருத்துவமனைக்கு அழைத்து சென்று இலவசமாக அறுவை சிகிச்சை
செய்யப்படும் காது, மூக்கு, தொண்டை பல் மருத்துவம் இலவசமாக அளிக்கிறார்கள்.
அகரம்துாளி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி நன்றி கூறிகிறார்.