Disqus Shortname

உத்திரமேரூர் ஒன்றியத்தில் இன்று "அம்மா' திட்ட முகாம்

உத்திரமேரூர்: ஜூலை 15,
"அம்மா' திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் மக்கள் குறை தீர்க்கும் முகாம், இன்று, உத்திரமேரூர் ஒன்றியத்தில், மூன்று ஊராட்சிகளில் நடைபெற உள்ளது.
மலையாங்குளம் ஊராட்சியில் நடைபெறும், "அம்மா' திட்ட முகாமிற்கு, வட்டாட்சியர் தேவராஜன் தலைமை தாங்குகிறார். மேனலூர் ஊராட்சியில் தனி வட்டாட்சியர் கிரிஜா (சமூக பாதுகாப்பு திட்டம்) தலைமையில் முகாம் நடக்க உள்ளது. திணையாம்பூண்டி ஊராட்சியில் நடைபெறும் முகாமிற்கு, காஞ்சிபுரம் கோட்ட கலால் அலுவலர் தாமோதரன் தலைமை தாங்குகிறார்.
இம்முகாம்களில், அவ்வூராட்சிகளைச் சேர்ந்த மக்கள், குடும்ப அட்டை பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல், மனை பட்டா, விதவை நிவாரண தொகை, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கான மனுக்களை அளித்து, உடனடி பயன் பெறலாம் என, வட்டாட்சியர் தேவராஜன் தெரிவித்து உள்ளளார்.